தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளுக்கு வலை! - ரவுடி வெட்டிக்கொலை

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த நான்கு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை
பட்டப்பகலில் ரவுடி ஒருவர் வெட்டிக்கொலை

By

Published : Jan 29, 2021, 6:58 PM IST

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி நாராயணன் (29). இவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இன்று (ஜன. 29) தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவர் காசிமேடு துறைமுகம் பகுதியில் உணவருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர், நாராயணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலக்ஷ்மி, உதவி ஆணையர் தினகரன் ஆகியோர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்த இரண்டு கத்திகள், செல்போன் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நாராயணனின் தம்பி சுடர்மணியை திருவொற்றியூர் பகுதியில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலைசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பணத்தாசையில் நடைபெற்ற சீர்காழி சம்பவம்; விவரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ABOUT THE AUTHOR

...view details