தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 21, 2020, 2:02 PM IST

ETV Bharat / state

வங்கி ஊழியரின் பைக் திருட்டு: போலீஸ் விசாரணை!

சென்னை: தாம்பரம் அருகே வங்கி ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிய கும்பலை, சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வங்கி ஊழியரின் பைக் திருட்டு
வங்கி ஊழியரின் பைக் திருட்டு

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், அம்பத்தூரிலுள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் வழக்கம் போல் பணிக்குச் சென்றுவிட்டு வீட்டின் வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து காலை மீண்டும் பணிக்குச் செல்வதற்காக வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் ராதாகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சி

அந்த காட்சிகளின் அடிப்படையில், இருசக்கர வாகனத்தை திருடிய கும்பல் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details