தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 3, 2021, 6:46 PM IST

ETV Bharat / state

பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை:கே.கே.நகர் பகுதியில் உள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜகோபால் மீது கடந்த மே மாதம் பள்ளி மாணவிகள் சமூக வலைதளங்களில் பாலியல் புகார்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளும் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து மே மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏழு மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நேரடியாகவும், எழுத்துப் பூர்வமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வழக்கில் 17 நபர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று (அக்.03) அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவப் பரிசோதனை

ABOUT THE AUTHOR

...view details