தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 28, 2021, 2:20 PM IST

ETV Bharat / state

மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல்

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர்கள் ராஜகோபாலன், ஆனந்தன் மீது காவல் துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளனர்.

hargesheet
குற்றப்பத்திரிகை

சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு அந்தப் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு அளித்துவருவதாக கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த மே 24ஆம் தேதி அசோக் நகர் காவல் துறையினர், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

மேலும் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடும் நெருக்கடிக்குப் பின்னர் அவரைப் பணியிடை நீக்கம் செய்தது.

பல மாணவிகளுக்கு ராஜகோபாலன் தொந்தரவு அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல் துறைக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி கடந்த ஜூன் 25ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இவ்விவகாரம் குறித்து அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, அவர் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர்.

அதேபோல், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீதான பாலியல் வழக்கில் 27 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முழுமையான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் துறையினர் தாக்கல்செய்துள்ளனர்.

இந்த இரண்டு குற்றப்பத்திரிகைகளும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போராட்டமே ஒரே ஆயுதம் - அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details