சென்னை: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளுக்கு 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கரோனா விதிமுறைகள் குறித்து திரையரங்க உரிமையாளர்களிடமும் மாநகராட்சி அலுவலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியது. இதனால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கரோனா விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இதில் ஈக்காட்டுதாங்கலில் இயங்கி வரக்கூடிய காசி திரையரங்கம் கரோனா விதிமுறைகளை மீறியதாகவும், 50 விழுக்காட்டிற்கும் அதிகமான ரசிகர்களை அனுமதித்ததும் தெரியவந்தது.