சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் தனியாருக்குச் சொந்தமான பார் ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பாரில் சனிக்கிழமைதோறும் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று இந்தப் பாரில் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், சிறுமிகளை அனுமதித்து அங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் பாரில் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் என 40-க்கும் மேற்பட்டோர் பாரில் குடித்துவிட்டு, சாலையில் நின்று ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் மது போதையில் இருந்த சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்துகொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.