இந்தியாவில் வடமாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.
உயிரிழப்புகளைத் தவிர்க்கும்வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுமுதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட இருக்கின்றன. அதே சமயம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 70 நாள்களுக்குப் பின்னரே ரத்த தானம் செய்ய முடியும்.
புற்றுநோய், சாலை விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படும். இதனால் தற்போது ரத்தப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயகர சூழ்நிலை உருவாகியுள்ளது.