தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக் உற்பத்தியை நெறிமுறைப்படுத்த வேண்டும்- பிளாஸ்டிக் சங்கத்தினர் கோரிக்கை - பிளாஸ்டிக் சங்கத்தினர் கோரிக்கை

சென்னை : பிளாஸ்டிக் உற்பத்தியை நெறிமுறைப்படுத்த வேண்டும், அதனை தடை செய்ய வேண்டாம் என தமிழ்நாடு  பிளாஸ்டிக் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

plastic-association-pressmeet

By

Published : Sep 25, 2019, 6:14 PM IST

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் சங்கரன், "மேலை நாடுகளைப் பார்த்து இந்தியாவிலும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படுகிறது , ஆனால் இந்தியாவில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு என்பது மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு 60 கிலோவிற்கு மேல் உள்ள நிலையில், நமது நாட்டில் இது வெறும் 11 கிலோவாக உள்ளது.

தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் சங்கரன் செய்தியாளர் சந்திப்பு

ஐம்பத்தொரு மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தாலே போதுமானது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ள பரிந்துரையை, மத்திய அரசு ஏற்க வேண்டும். பிளாஸ்டிக்கை முற்றிலுமாக தடை செய்தால் 50 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பிளாஸ்டிக்கை ஒட்டுமொத்தமாக தடை செய்ததற்கு பதிலாக அதன் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து அதனை முறைப்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தனியார் மயமாகும் விமான நிலையம் - அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details