தமிழ்நாடு

tamil nadu

5 ஆண்டுகள் சம்பளப் பாக்கி: புகைப்படக் கலைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

By

Published : Feb 14, 2022, 3:40 PM IST

சென்னையில் கடந்த ஐந்தாண்டுகளாகப் பிரபல நியூஸ் ஏஜென்சி நிறுவனம் சம்பளம் தராததால் புகைப்படக் கலைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

புகைப்படக் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை
புகைப்படக் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: திருவல்லிக்கேணி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (56). இவருக்குத் திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். பிரபல நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் குமார் புகைப்படக் கலைஞராகவும் மேலாளராகவும் பணிபுரிந்துவந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளாக குமார் வேலை பார்த்துவந்த நியூஸ் ஏஜென்சி நிறுவனம் சம்பளம் தராமல் அலைக்கழித்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அவரின் மகளின் திருமணத்திற்குப் பலரிடம் பணம் கேட்டுக் கிடைக்காததால் மேலும் மன அழுத்தத்தில் இருந்துவந்த குமார் நேற்று (பிப்ரவரி 13) இரவு நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள யுஎன்ஐ அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நள்ளிரவு அலுவலகத்திற்குச் சென்ற சக ஊழியர் வனமாலை கதவைத் திறந்து பார்த்தபோது குமார் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவயிடத்திற்குச் சென்ற காவல் துறையினர் குமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புகைப்படக் கலைஞரின் தற்கொலை குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ரயில்வே பணியாளரிடம் வழிப்பறி: சிசிடிவியில் சிக்கிய மூவர் கைது

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details