சென்னை: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியான போன் பே நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அதில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தைப்போல உள்ளதால் 'மொபைல் பே' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாகக்கூறி, மொபைல் பே நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைகளுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.