சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழந்தூர் நியாய விலைக் கடையில், எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், அனிதா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், "விற்பனையாளர் பணிக்குத் தேவையான கல்வி, வயது தகுதியுடையோர் ஏராளமானோர் உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா என்பவர் எந்த தேர்வு நடைமுறையினையும் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் தெரிவித்தபோது, 5 லட்சம் ரூபாய் கொடுத்து இப்பணியை பெற்றதாக அனிதா தெரிவித்தார்.