இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் சங்கர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
- நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- அரசாணை 177 படி உடற்கல்வியில் அனைத்து உயர் கல்விக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
- அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
- அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.