தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 3 தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதி! - Former Chief Minister P Subbarayan

சென்னையில் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் முதலமைச்சர் பா.சுப்பராயன், அப்துல் கலாம் ஆகிய 3 தலைவர்களுக்கு சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் 3 தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதி
சென்னையில் 3 தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதி

By

Published : May 30, 2022, 8:09 PM IST

சென்னை:கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா.சுப்பராயன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோருக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

இதன்படி ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை அமைக்கவும், காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா. சுப்பராயன் சிலை அமைக்கவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை அமைக்கவும் அனுமதி அளிக்கக்கோரி செய்தி மக்கள் தொடர்புதுறை துணைச் செயலாளர் சார்பில் சென்னை மாநகராட்சிக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் 3 சிலைகளை வைக்க அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:தேசியக்கல்விக்கொள்கையைப் படிக்காமலேயே சிலர் எதிர்க்கின்றனர் - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details