தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி? - கரோனா பரவலால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா

கரோனா பரவல் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி?
பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி?

By

Published : Jan 6, 2022, 8:28 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கரோனா 3ஆவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

பொங்கல் பண்டிகையன்று தனியார் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துதல், 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ், ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம் போட்டியில் களம் காண்பது, நாட்டு இன மாடுகள் மட்டுமே அனுமதிப்பது, காயமுற்ற காளைகள் களமிறங்காமல் இருப்பது உள்ளிட்ட விதிகளுடன் அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அதிகரிக்கும் கரோனா - ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டும் நெறிமுறைகள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details