தமிழ்நாடு

tamil nadu

கரோனாவா அப்படினா...பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கோயம்பேட்டில் குவிந்த மக்கள்!

By

Published : Jan 14, 2021, 7:40 AM IST

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் கோயம்பேட்டில் குவிந்துள்ள நிலையில், பேருந்துகள் குறைவாக இருந்ததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

கோயம்பேட்டில் குவிந்த மக்கள்
கோயம்பேட்டில் குவிந்த மக்கள்

கரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தில் ஏறி செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டமாக கூடினர்.

கோயம்பேட்டில் குவிந்த மக்கள்

கடந்த இரு நாள்களாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பயணிகள் வருகை மிக குறைவாக இருந்த நிலையில் இன்று காலை முதல் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத மக்கள்

இரவு நேரத்தில் ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள நிலையில், போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் மக்கள் கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் நேற்று (13.01.2021) இரவு 10 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,050 பேருந்துகளில் 1,976 பேருந்துகளும், 1,280 சிறப்புப் பேருந்துகளும் நீக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

கடந்த 11ஆம் தேதி முதல் இன்று இரவு வரை, 9,016 பேருந்துகளில் 4,35,683 பயணிகள் பயணித்துள்ளனர் என்றும், இதுவரை 1,22,500 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை

ABOUT THE AUTHOR

...view details