சென்னை: குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஸ்வந்த் சின்ஹா சென்னை வருகை தந்திருக்கும் பொழுது, அவரை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் சந்தித்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்தும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பேனா மாயமாகியுள்ளது.
குறிப்பாக தனது தந்தையும், மறைந்த வசந்த் அண்ட் கோவின் நிறுவனர் வசந்தகுமார் பயன்படுத்திய பேனா என்பதால், தந்தையின் நினைவாக உள்ள அந்த பேனாவை கண்டுபிடிப்பதற்காக புகார் அளித்துள்ளார்.