சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் ரத்தினமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர், டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு அண்மையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவருக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று (மே.21) இரவு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு இருப்பதாக கூறி வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு ராஜேந்திரனின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இன்று (மே.22) காலை மட்டும் சிகிச்சை அளிக்குமாறு உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.