சென்னை:மதராசப்பட்டினம், மெட்ராஸ் என்று மாரிய காலத்தில் இருந்து, சென்னையின் முக்கிய வணிக பகுதியாக திகழ்ந்து வருகிறது சென்னை பிராட்வே. இது பாரீஸ், பூக்கடை, ஜார்ஜ் டவுன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1676 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கறுப்பர் நகரம் முத்தியால் பேட்டை மற்றும் பெத்த நாயக்கன் பேட்டை என்று இரண்டு பகுதிகளை உள்ளடக்கி விரிவடைந்திருந்தது. இந்த இரு பகுதிகளுக்கும் நடுவே அட்டப்பள்ளம் கால்வாய் ஒன்று இருந்தது. இந்த சமயத்தில், பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஸ்டீபன் போபம், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அந்த கால்வாயை மண்ணைக் கொண்டு பள்ளத்தை நிரப்பி சமன் செய்து விரிவான சாலையை அமைத்தார்.
அவர் நினைவாக இந்தச் சாலை "போபமின் பிராட்வே" என்று பெயரிடப்பட்டது. அதற்கு பிறகு சுதந்திர போராட்ட வீரர் டி.பிரகாசத்தின் பெயரால் பிரகாசம் சாலை என பெயர் வைத்து அழைத்தாலும். பிராட்வே என்ற பெயர் மக்கள் மனதில் இன்று வரை நிலைத்துள்ளது. தற்போது பிராட்வே வணிகம், ஆன்மிகம், மருத்துவம், அரசியல் என பல்வேறு துறைகளின் தலைமை பகுதியாக விளங்குகிறது.
குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ராஜா அண்ணாமலை மன்றம், கந்த கோட்டம் முருகர் கோயில், காளிகம்பாள் அம்மன் கோயில், ஆர்.பி.ஐ சென்னை தலைமையிடம், பர்மா பஜார், பிளாஸ்டிக் பொருட்களுக்கான நாராயண முதலி தெரு, உடைகளில் மொத்த சந்தையான குடோன் தெரு, தங்க நகைகள், வாசனை திரவியங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மொத்த விலையில் கிடைக்கும் இடமாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சென்னையின் முக்கிய போக்குவரத்தான பேருந்து நிலையம் எப்போதும் பயணிகளால் பரப்பரப்பாக காணப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிராட்வே பேருந்து நிலையம் தான் முக்கிய பேருந்து நிலையமாக சென்னையில் இயங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, நாகர்கோயில், தென்காசி, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதன் பிறகு, சென்னை வளர்ச்சி அடையும் சமயதில் போக்குவரத்து நெரிசலும் கூடவே வளர்ந்ததால், பிராட்வே பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. தற்போது சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இங்கிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருநின்றவூர், தாம்பரம், பூந்தமல்லி, மாம்மல்லபுரம், திருப்போரூர், வேளச்சேரி, தண்டையார் பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையமும் அருகில் தான் உள்ளது. இப்படி முக்கிய பகுதியாக இருக்கும் இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி இருப்பது பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் பல சீரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இது குறித்து பயணி யோகலக்ஷ்மி கூறியதாவது, "நான் ஆவடியில் பூ வியாபரம் செய்கிறேன், பூ வாங்குவதற்காக தினமும் ஆவடியில் இருந்து பிராட்வே-க்கு 71E என்ற பேருந்தில் வருகிறேன். சுமார் 1.30 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் மூன்று கழிப்பறை தான் இருக்கிறது. அதிலும் சுத்தம் என்பது கேள்வி குறி தான். கட்டண கழிப்பிடத்திலும் நபர் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.