தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை - சென்னை மாநகராட்சி

சென்னை முழுவதும் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 25 ஆயிரத்து 022 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பரிசோதனை
பரிசோதனை

By

Published : Jul 11, 2020, 9:51 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் சென்னையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைகின்றனர். அதற்கு சரிசமமாக குணமடைந்தவரின் சதவீதமும் உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக, மாநகராட்சியும் ,சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ( ஜூலை 11) 468 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 52, அண்ணாநகரில் 47, ராயபுரத்தில் 46 மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம்களில் மொத்தம் 25 ஆயிரத்து 022 நபர்கள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் 1710 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மே 8ஆம் தேதி முதல் இன்று( ஜூலை 11) வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 15 ஆயிரத்து 704 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன.

அதில் 9 லட்சத்து 91 ஆயிரத்து 060 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details