கரோனா வைரஸ் தொற்றால் சென்னையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைகின்றனர். அதற்கு சரிசமமாக குணமடைந்தவரின் சதவீதமும் உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக, மாநகராட்சியும் ,சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ( ஜூலை 11) 468 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 52, அண்ணாநகரில் 47, ராயபுரத்தில் 46 மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம்களில் மொத்தம் 25 ஆயிரத்து 022 நபர்கள் பரிசோதிக்கப்பட்டன.