சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கோழி கடையில் பணிபுரியும் நபர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடை ஊழியரை காவல் உதவி ஆய்வாளர் ஷூ காலால் மிதித்துள்ளார்.
கோழிக் கடைக்காரர் மீது தாக்குதல்
இதன் காணொலி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.