கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளுக்கும், சாதாரண குடிமகனுக்கும் அத்தியாவசிய தேவையான ஏ.சி, ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகங்களையும், ரிப்பேர் செய்யும் கடைகளையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.