தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு ( low tencity ) பெற அதற்கான படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்துச் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து இணைப்பு பெற வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது. அவ்வாறு தாழ்வழுத்த இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடம் மின் வாரிய அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தாழ்வழுத்த மின் இணைப்பு பெறும்போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் இணைப்புகள் பெற விரும்புவோர் இணையத்தில் மட்டுமே தங்களது ஆவணங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.