தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் பிரசாதம், விளக்கு ஏற்றுவதற்கான வெண்ணெய், நெய் ஆகியவற்றை ஆவின் நிறுவனம் மூலமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், "கோயில்களில் பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும், பிரகாரங்களில் தரமற்ற நெய்யைப் பயன்படுத்தி விளக்கு / தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினைத் தவிர்க்கும்பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.