தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்கெட்டில் இருந்த நீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு - நீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி

விருகம்பாக்கம் அருகே ஒரு வயது குழந்தை, குளியலறையில் இருந்த பக்கெட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்தது.

குழந்தை பலி
குழந்தை பலி

By

Published : Jan 16, 2023, 7:47 AM IST

சென்னை:விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருக்கு 1 வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டின் குளியலறையில் இருந்த பக்கெட்டில் நீரில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்துள்ளது.

சிறிது நேரம் கழித்து அவரது தாய் சென்று பார்த்தபோது பக்கெட்டில் இருந்த நீரில் மூழ்கி மயங்கிய நிலையில் குழந்தை கிடந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக குழந்தையை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குழந்தையில் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பு வைத்து, இது குறித்து விசாரணை நடத்தினர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகிதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: China Manja: சீன மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் காயம்.. 120 தையல் போட்டு உயிர் மீட்பு...

ABOUT THE AUTHOR

...view details