சென்னை: மயிலாப்பூர் பக்தவத்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் பத்மஜா தேவி (82) என்ற மூதாட்டி வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு (ஆகஸ்ட் 3) பத்மஜா துவைத்த துணிகளை உலரவைக்க வீட்டின் பால்கனிக்குச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பால்கனி சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய மூதாட்டி சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.