சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் செல்ல கூடிய சாலையில் தாம்பரத்தில் இருந்து மண்ணிவாக்கம் சென்றுக் கொண்டிருந்த மணல் லாரி ஒன்று லக்ஷ்மிபுரத்தை கடக்க முயன்றபோது லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்ட லாரி ஓட்டுனர் லாரியை விட்டு தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.