தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2022, 1:15 PM IST

ETV Bharat / state

சென்னையில் மதுபான லாரி கவிழ்ந்து விபத்து; ஒருவர் படுகாயம்!

ஸ்ரீபெரும்புதூரில் மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இறக்குமதி செய்ய வந்த ஊழியர் ஒருவரின் கால் லாரிக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.

சென்னையில் மதுபான லாரி கவிழ்ந்து விபத்து; ஒருவர் படுகாயம்!
சென்னையில் மதுபான லாரி கவிழ்ந்து விபத்து; ஒருவர் படுகாயம்!

சென்னை திருமழிசையில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக் கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு லாரி ஒன்று இறக்குமதி செய்ய சென்றது. அப்போது கடையின் எதிரில் இருந்த பள்ளத்தில் இறங்கியதில், லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த மதுபான பாட்டில்கள் சேதமடைந்ததோடு, இறக்குமதி செய்ய வந்த ஊழியர் ஒருவரின் கால் லாரிக்கு அடியில் சிக்கியது. இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கும் ,108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தனர்.

பொக்லைன் மூலம் மீட்கப்பட்ட ஊழியர்

அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த ஊழியர் மார்த்தாண்டம் (29) என்பவரே விபத்தில் சிக்கியது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்கள் உதவியோடு மார்த்தாண்டத்தை மீட்க முயற்சித்தனர்.

இருப்பினும் அம்முயற்சி தோல்வியுற்றதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மார்த்தாண்டம் லாரிக்கு அடியிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் பேருந்தும் லோடு ஆட்டோவும் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details