தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத நகைக்கடைக்கு சீல்! - சென்னை

சென்னையில் கரோனா விதிமுறைகளை நகைக்கடை பின்பற்றவில்லை என கூறி அக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னையில் கரோனா விதிமுறைகளைக் கடப்பிடிக்காத நகைக்கடைக்கு அதிகாரிகள் சீல்!
சென்னையில் கரோனா விதிமுறைகளைக் கடப்பிடிக்காத நகைக்கடைக்கு அதிகாரிகள் சீல்!

By

Published : Jul 16, 2022, 11:48 AM IST

Updated : Jul 16, 2022, 3:52 PM IST

சென்னை: மயிலாப்பூர் பஜார் சாலையில் அமைந்துள்ள கடைகளில் கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது சாந்தா தங்க மாளிகை கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 13 பேர் முக கவசம் அணியாமல் இருந்ததையும், சமூக இடைவெளியை பின்பற்றாததையும் கண்டறிந்தனர்.

இதனால் மாநகராட்சி ஊழியர்கள் முக கவசம் அணியாத நபர்களிடம் அபராத தொகையை செலுத்துமாறு கேட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரி முரளியை நகைக்கடையின் உரிமையாளர் சந்தோஷ் குமார் தாக்கினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அபராதம் விதிக்க வந்த அதிகாரியைத் தாக்கிய கடை உரிமையாளர் சந்தோஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி அதிகாரி முரளி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்ததாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சாந்தா நகைக்கடையை பூட்டி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க:Video: முகக்கவசம் போடச்சொல்லிய அதிகாரியின் சட்டையை பிடித்த நகை கடை உரிமையாளர்!

Last Updated : Jul 16, 2022, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details