தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2021, 3:41 PM IST

Updated : Aug 18, 2021, 5:55 PM IST

ETV Bharat / state

தமிழிசை தாயார் மறைவு- ஒபிஎஸ்., இபிஎஸ் இரங்கல்!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று (ஆக.18) காலமானார். அவரது மறைவுக்கு ஒபிஎஸ்., இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒபிஎஸ்., இபிஎஸ் இரங்கல்
ஒபிஎஸ்., இபிஎஸ் இரங்கல்

சென்னை: தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் இன்று அதிகாலை காலமானார். இதனை தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர்

அதில், "என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பவருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாரும், மூத்த அரசியல்வாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவருமான குமரி அனந்தன் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மன வேதனையும் அடைந்தேன்.

ஆழ்ந்த இரங்கல்

இந்த இழப்பினை தாங்கிக் கொள்ளும் மன வலிமையையும், நெஞ்சுறுதியையும் அவர்களுக்கு வழங்கிட இறைவனை இறைஞ்சுகிறேன். கிருஷ்ணகுமாரியை இழந்து வருந்தும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், குமரி அனந்தன் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனை வேண்டுகிறேன்

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என அதில் கூறியுள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தாயார் கிருஷ்ணகுமாரி காலமான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்பு சகோதரிக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஒ.பன்னீர்செல்வம் இரங்கல்

Last Updated : Aug 18, 2021, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details