தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லியிலிருந்து சென்னை வந்தார் ஓபிஎஸ் - சென்னை மாவட்ட செய்திகள்

டெல்லியில் இருந்து விஸ்தாரா விமானம் மூலம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை வந்தடைந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

By

Published : Jul 27, 2021, 5:34 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த ஜூலை 25ஆம் தேதி காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் டெல்லி சென்றனர்.

அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினர். அப்போது அதிமுக விவகாரங்கள், தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் விஸ்தாரா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் அவரை வரவேற்றனர்.

இதையும் படிங்க: மல்லையாவின் சொத்துகளை முடக்க அனுமதி... வசூல் வேட்டைக்கு வங்கிகள் தயார்

ABOUT THE AUTHOR

...view details