தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2020, 2:02 PM IST

ETV Bharat / state

4 விழுக்காடாக குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னை: கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நான்கு விழுக்காடாக குறைந்துள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

4 விழுக்காடாக குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
4 விழுக்காடாக குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வடசென்னை பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்தாலும் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதற்குச் சமமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 94 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடும் நான்கு விழுக்காடாக குறைந்துள்ளது. தற்போது, ஒரு மண்டலத்தில்கூட சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக, அண்ணா நகரில் 663 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அனைத்து மண்டலங்களிலும் குணமடைந்தவரின் விழுக்காடும் 90க்கு மேல் உள்ளது.

இதுவரையில் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 077 பேர், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 374 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், மூன்றாயிரத்து 607 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் மண்டலவாரியாக சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

அண்ணா நகர் - 663 பேர்

கோடம்பாக்கம் - 587 பேர்

தேனாம்பேட்டை - 553 பேர்

ராயபுரம் - 468 பேர்

திரு.வி.க. நகர் - 559 பேர்

அடையாறு - 513 பேர்

வளசரவாக்கம் - 313 பேர்

அம்பத்தூர் - 436 பேர்

தண்டையார்பேட்டை - 303 பேர்

திருவொற்றியூர் - 118 பேர்

மாதவரம் - 199 பேர்

ஆலந்தூர் - 244 பேர்

சோழிங்கநல்லூர் - 139 பேர்

பெருங்குடி - 299 பேர்

மணலி - 88 பேர்

ABOUT THE AUTHOR

...view details