இந்திய தொழில்நுட்ப கழகமான சென்னை ஐஐடி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அல்லது பிற்காலத்தில் ஐ.ஐ.டி.யில் சேர விரும்புபவர்களும் இந்த இணைய வழி படிப்பினைத் தொடரலாம். ஆன்லைன் சான்றிதழ் வாங்கிய மாணவர்களுக்கு 20 சதவீத கிரெடிட் ட்ரான்ஸ்பர் செய்யப்படுகிறது.
படிப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், சான்றிதழ் வாங்க நினைக்கும் மானவார்களுக்கு தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான onlinecourses.nptel.ac.in மூலம் பதிவு செய்யலாம்.
“கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின், மாணவர்கள் NPTEL படிப்புகளை தங்களது பிரதான பாடத்திட்டங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கவேண்டிய சூழலில், இது நல்ல வாய்ப்பாக அமைகிறது.