தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தட்கலில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு! - பொதுத் தேர்விற்கு தட்கலில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜனவரி 2,3ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

public examination
public examination

By

Published : Dec 27, 2019, 7:50 PM IST

இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் ஜனவரி 2, 3ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளைப் பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.

கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக 11, 12ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சிபெறாத தேர்வர்கள் அனைவரும் மீண்டும் எழுதுவதற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் தாங்கள் எந்தக் கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி அரசுத் தேர்வுத் துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி, பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது; தனித்தேர்வர்களின் விண்ணப்பம், தகுதி குறித்து ஆய்வுசெய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் திபுதிபுவென புகுந்த 150 பேர்: வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்து அராஜகம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details