சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கினார். இது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
அந்த வழக்கை ரத்துசெய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், ஸ்ரீ நிஷா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சிபிசிஐடி அலுவலர்களின் அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு முன்னிலையாகினர்.
அதேபோல், கடந்த 12ஆம் தேதி சிபிசிஐடி அலுவலர்கள், ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக சென்னை பல்லவாரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.