சென்னை: பெங்களூரில் இருந்து அசாம் மாநிலத்திற்கு செல்கிறது தனுஷ்கியா விரைவு ரயில். பெரம்பூர் வழியாக கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் சென்று, அங்கிருந்து அசாம் செல்கிறது.
தனுஷ்கியா விரைவு ரயில் பெரம்பூர் வந்தபோது பள்ளி, கல்லூரி மாணவர்கள் வட மாநிலத்திற்கு செல்வதற்காக தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியில் நேற்று (டிச. 27) ஏறினர். அப்போது வட மாநிலத்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பெட்டியில் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து பெற்றோர்களிடம் மாணவர்கள் செல்போனில் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசாருக்கு பெற்றோர்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார், திருவொற்றியூரில் தனுஷ்கியா விரைவு ரயிலை நிறுத்தினர்.