தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்! - போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்

By

Published : May 3, 2020, 10:49 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தினசரி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாநகரமே முடங்கியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி வேலைப்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கால் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் இருக்கும் தங்களை, தங்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் சுமார் ஆயிரித்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்

கரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர், மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வலியுறுத்தியும் வரும் நிலையில், இதுபோன்ற வைரஸ் குறித்த போதிய விழிப்புணர்வின்றி ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் கரோனா தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துவைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பார்க்க:தமிழ்நாட்டின் வூஹான் ஆன கோயம்பேடு; தவறு எங்கே நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details