தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 15 நாட்களுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு-சென்னை குடிநீர் வாரியம்! - நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணி

சென்னை: நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளுக்காக 15 நாட்களுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 15 நாட்களுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு  குடிநீர் வழங்குவதில் பாதிப்பு-சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு  no water supply for next 15 days from march 17  நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணி  nemmeli sea water project
சென்னையில் அடுத்த 15 நாட்களுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு-சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு no water supply for next 15 days from march 17 நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணி nemmeli sea water project

By

Published : Mar 15, 2020, 1:24 AM IST

Updated : Mar 15, 2020, 9:20 AM IST

சென்னை நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு தானியங்கி வடிகட்டி அலகுகள் ( Travelling band screen ) பொருத்தும் பணி 17.03.20 ம் தேதி முதல் 01.04.20 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட்நகர், மைலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈச்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு 17.03.20ஆம் தேதி முதல் அடுத்த15 நாள்களுக்கு குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக 15 நாள்களுக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகளில் தண்ணீர் பெற்றுக்கொள்ள அந்தந்தப் பகுதி குடிநீர் வாரிய பொறியார்களை தொடர்புகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Mar 15, 2020, 9:20 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details