தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 13, 2022, 10:48 PM IST

ETV Bharat / state

திமுக அரசின் துரித நடவடிக்கையால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை - திமுக அமைச்சர்கள்

சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில் , எந்த பகுதியிலும் மழை நீர் தேங்காமல் பாதுகாக்கப்படுவதற்கு திமுக அரசின் துரித நடவடிக்கையே காரணமென திமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் துரித நடவடிக்கையால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர்கள்
திமுக அரசின் துரித நடவடிக்கையால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர்கள்

சென்னை: திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் மற்றும் துரித பணிகளால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை இன்று (13.11.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

சென்னை, சைதாப்பேட்டையில், டாக்டர் கலைஞர் பொன்விழா வளைவு அருகில் செய்தியாளர்களைச் சந்தித்து, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், மேற்கொண்ட ஆய்வு குறித்தும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் விரிவாக விளக்கிக் கூறினார்கள்.

அடாது மழை பெய்தாலும், விடாது ஆய்வுப் பணி தொடரும் என இன்று (13.11.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் சைதாப்பேட்டையில் ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல் உள்வட்டச் சாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதானச் சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பதையும், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பின்றி மழைநீர் வேகமாக ஓடுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இருவரும் சைதாப்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்த பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், இந்த ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், மழைநீர் வடிகால்கள் மூலமாக உடனுக்குடன் வடிந்து விடுகிறது என்றும் தெரிவித்தார்கள்.

சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலை பகுதியில், தேங்கும் மழை நீரை அகற்றும் பொருட்டு, பெரிய அண்ணா சாலையின் குறுக்கே டாக்டர் கலைஞர் பொன்விழா வளைவு அருகில், முன்வார்ப்பு கால்வாய் மற்றும் வடிகால் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில், ரூ.1.05 கோடி மதிப்பில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன பருவ மழை காலம் முடிந்தபின் இப்பணி உடனே துவக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

உள்வட்டச் சாலையில், ஈக்காட்டுத்தாங்கலில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சி.ஆர்.ஐ.டி.பி. திட்டத்தின்கீழ் 435 மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால், ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால்வாயில் உள்ள மழைநீர் ஒரு பகுதி அடையாறுக்கும், மற்றொரு பகுதி சிட்கோ கால்வாய்க்கும் செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது என்பதால், இப்பகுதியில், மழைநீர் தேங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பில்லை - அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details