சென்னை நகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கி இருக்கிறது. பூங்காக்களில் மரம் சரிந்து விழுந்துள்ளது. சில இடங்களில் மரக் கிளைகள் ஒடிந்து விழுந்துள்ளன.
இதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. பொது போக்குவரத்து சேவை வழக்கம் போல் இயங்குகிறது.
சென்னை நகரப் பகுதிகளில் நிவர் புயல் தாக்கம் குறைவு நிவர் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
நேற்று (நவ.26) மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின் இணைப்பு மாலைக்குள் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி பிரத்யேக பேட்டி