பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய சிறு குறு நிறுவன அமைச்சகம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 'womennovator' நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் சிறு, குறு நிறுவன அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது நாடு சந்தித்துவரும் பொருளாதார மந்த நிலை, உலக அளவில் நிலவும் பொருளாதார சூழலாலும், உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையே உள்ள வித்தியாசத்தாலும் ஏற்பட்டுள்ளது. சிறு குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.