தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி, கோவையில் உறைபனி பொழியக்கூடும் - வானிலை முன்னறிவிப்பு - புதுச்சேரி வானிலை முன்னறிவிப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இரவு நேரங்களில் உறைபனி பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nilgiris
Nilgiris

By

Published : Jan 13, 2023, 1:43 PM IST

Updated : Jan 13, 2023, 3:09 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஜன.13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்- ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:SNOWFALL OVER HILLS: கொடைக்கானலில் தொடங்கியது உறை பனி சீசன்

Last Updated : Jan 13, 2023, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details