தமிழ்நாடு

tamil nadu

திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், மது அருந்துவதை கணவர் நிறுத்தாததால் மனமுடைந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

By

Published : Dec 20, 2020, 9:13 PM IST

Published : Dec 20, 2020, 9:13 PM IST

ரேணுகா
ரேணுகா

சென்னை மாவட்டம், மதுரவாயலை சேர்ந்தவர் கார்த்தி (24). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரேணுகா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

கார்த்தி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனை ரேணுகா கண்டித்து வந்தார். இந்நிலையில் நேற்று(டிச.19) இரவு வழக்கம் போல் கார்த்தி மது அருந்திவிட்டு வந்ததால் ரேணுகா அவரை கண்டித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று (டிச.20) காலை ரேணுகாவை சமாதானப்படுத்துவதற்காக வானகரம் மீன் மார்க்கெட்டிற்கு சென்ற கார்த்தி, மீன் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து, மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், ரேணுகா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் கார்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேணுகாவின் தந்தை மது பழக்கம் உடையவர். இதனால் தனது கணவர் மது அருந்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கார்த்தி அதனை மீறியதால் மனைவி கண்டித்து வந்தார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகவே ரேணுகா தற்கொலை செய்துகொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. திருமணமாகி மூன்று மாதங்களே ஆனதால், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாலை விபத்தில் ஐந்து வயது மகளுடன் தந்தை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details