தமிழ்நாடு

tamil nadu

பத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல்!  - தமிழ்நாடு அரசின் புதிய நடைமுறை

By

Published : Feb 11, 2020, 8:00 AM IST

சென்னை: பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.

new plan execute in tn sub register office  புதிய பட்டா மாறுதல் நடைமுறை  பத்திரப்பதிவு நடைமுறை  தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை நடைமுறை  பட்டா மாறுதல் புதிய நடைமுறை
தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டிலுள்ள வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் சார்பதிவாளர் அலுவலங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கான படிவத்தை வருவாய்த் துறைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் படிவத்திற்கு ஒப்புகைச் சீட்டு பொதுமக்களிடம் அளிக்கப்படும்.

இதனை வைத்து தாலுகா அலுவலகம் மூலம் பட்டா பெயர் மாறுதல் செய்யலாம். ஆனால், இந்த முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இனிவரும் காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து ஒரே சர்வே எண்களின் சொத்துக்கள் இருந்தால் பத்திரம் பதிவு செய்தவுடன், தானாக பட்டா மாறுதல் செய்யப்படும்.

இத்திட்டத்தின்படி சொத்தைப் பதிவு செய்தவர்கள் அந்தச் சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்தச் சொத்துகளில் வில்லங்கம் இருக்கிறதா என்பவதை சார்பதிவாளர் ஆய்வுசெய்ய வேண்டும். இதன் பிறகு சொத்துகளைப் பதிவு செய்தால் தானாக பட்டா மாறுதலாகி விடும் என்ற புதிய முறையை தமிழ்நாடு அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

ABOUT THE AUTHOR

...view details