தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2021, 10:11 PM IST

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் 8,183 பேருக்கு தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் இன்று 8 ஆயிரத்து 183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

சென்னை:தமிழ்நாட்டில் இன்று (ஜுன் 19) 8 ஆயிரத்து 183 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 14 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.

18 ஆயிரத்து 232 பேர் கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 4 ஆயிரத்து 885 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் இன்று (ஜுன் 19) 180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கரூரில் கரோனா: குறையும் பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details