ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வால் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்கள் -  டிஜிபி சைலேந்திரபாபு வேதனை - NEET has increased the number of students failing in Tamil

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வினால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
நீட் தேர்வினால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
author img

By

Published : Jul 7, 2022, 9:58 AM IST

சென்னை:சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில்காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கல்லூரி படிப்பு குறித்த ஆலோசனையும், கல்லூரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுமாணவர்கள் மத்தியில் பேசினார். “உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதால், தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து இருக்கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் கற்றுத் தருவதற்கான கல்வி மையங்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்த படிப்பை படித்தாலும் திறமையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு உயர்ந்த ஊதியத்தில், பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற முடியும்” என்றார்.

நீட் தேர்வினால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

அதனைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், “இன்றைய காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்கள் தங்களின் படிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக நன்கு யோசித்து படைப்பாற்றலையும், தகவல் தொழில்நுட்ப அறிவையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details