தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பயன் அளிக்கும்" - கல்வியாளர் சதீஷ் கருத்து

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் இறுதிச் செய்து அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லாமல் கற்கும் வகையில் உள்ளதுடன், மொழிகளை கற்றுக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என கல்வியாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 9:44 PM IST

Etv Bharat
Etv Bharat

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய கல்வியாளர் சதீஷ்

சென்னை:தேசிய புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழுவானது, புதிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அதில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் ஆண்டு தேர்வை நடத்திடாமல், மாவட்ட - மாநில அளவில் அதிகாரம் பெற்ற ஏதேனும் அமைப்பின் மூலமாக, ஆண்டு தேர்வை நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

ஆனால் அத்தேர்வில் மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டு தவணைகளாக பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், 2 மொழிப்பாடங்களை பயில வேண்டும் எனவும் அதில் ஒன்று தாய்மொழி அல்லாத இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வியாளர் சதீஷ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தேசியகல்விக் கொள்கையின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் முதலில் இந்திய மாெழிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்துள்ளனர். 4 விதமான நிலைகள் தேசியக்கல்விக்கொள்களையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அடிப்படைக்கல்வி, ஆயுத்தநிலைக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி என உள்ளது. இந்திய மாெழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் இந்திய மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உருவாக்கப்பட்டுள்ளது.

அடிப்படைக்கல்வி என்பது பீரிகேஜி முதல் 2 ஆம் வகுப்பு வரையிலும், 3, 4, 5ஆம் வகுப்பு ஆரம்பநிலைக் கல்வி என கூறப்படுகிறது. இந்த நிலையிலும் குழந்தைகளை ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழியை படித்து இருக்க வேண்டும். நடுநிலை வகுப்பில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் 3 மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மொழி ஆங்கிலமாகவும், வேறு ஏதாவது 2 மொழிகளையும் படிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மாணவர்கள் 11, 12 ஆம் வகுப்பு படிக்கும்போது ஆங்கிலம், வேறு ஒரு இந்திய மொழி படித்து இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் கோர் சப்ஜெட் எனப்படும் முக்கியப் பாடங்களை படிக்க வேண்டும்.

ஒரு குழந்தை 12 ஆம் வகுப்பு முடிக்கும் ஆங்கிலம் தவிர, வேறு ஏதாவது 2 இந்திய மொழிகளை எழுதுவதற்கும் படிப்பதற்கும் தயராக இருப்பார். தமிழ்நாட்டில் தமிழ் மொழியுடன் ஏதாவது ஒரு இந்திய மாெழியை கற்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்திதான் படிக்க வேண்டும் என கூறப்படவில்லை. மொழிகளை பொறுத்தவரையில் வரவேற்க வேண்டிது தான். மாணவர்களுக்கான பாடப்பிரிவுகளை பிரித்து வழங்கி உள்ளனர். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் இருக்க கூடாது. மன அழுத்தம் இல்லாமல் படிப்பதற்கு பருவ முறையில் தேர்வினை கொண்டு வர வேண்டும். ஆண்டிற்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என கூறியுள்ளனர்.

மேலும், பொதுத் தேர்வில் குழந்தை எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ அதனை பதிவு செய்யலாம் என கூறியுள்ளனர். 3, 5, 8ஆம் வகுப்பில் தேர்வு வைக்க வேண்டுமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் குழந்தைக்கு தேர்வு வைத்து அதில் மாணவர்களை தேர்ச்சி பெற்றாரா? இல்லையா? என்பதை கூறுவதற்கு தேர்வு வைக்கவில்லை. மாணவர்களுக்கு பாடப்புரிதலை தெரிந்துக் கொள்ளும் திறன் இருக்கிறதா? என்பதை தெரிந்துக் கொள்வதற்கு ஏதாவது ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு தேர்வினை நடத்த வேண்டும். அதில் குழந்தை மதிப்பெண் பெற்றாலும் இல்லாவிட்டாலும் குழந்தையை தேர்ச்சி என அறிவித்து விடலாம்.

அந்தப் பள்ளிக்கும், ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் தெரிந்தக் கொள்ளத்தான் வைக்கப்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் அனைவருக்கும் கட்டயாக் கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்ச்சி என்பதை மாற்றம் செய்யவில்லை. குழந்தையின் கற்றல் திறனை தெரிந்துக் கொள்ள வேண்டும் எனத் தான் கூறியுள்ளனர். மாணவர்களை 8 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். 9, 10, 11, 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறாவிட்டால் தேர்ச்சி அளிப்பது இல்லை என்ற நிலை வருகிறது.

சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மொழி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும், திறன்வளர்ப்பதற்கு ஒரு பாடத்தையும், மேலும் மாணவர் விரும்பினால் மாெழிப்பாடத்தையும் கூடுதலாக வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தேசியகல்விக் கொள்கையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு 10 பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளது. மொழியில் ஆங்கிலம் மற்றும் ஏதாவது 2 மாெழிப்பாடங்கள் வைத்துக் கொள்ளலாம். மேலும் பகுதி 2, பகுதி 3, பகுதி 4 என பிரித்துள்ளனர்.

பகுதி 2-ல் கலை (ஒவியம்) உடற்கல்விக்கல்வி, தொழிற்கல்வி, பகுதி 3-ல் சமூக அறிவியியல், பகுதி 4-ல் கணக்கு, கம்ப்யூட்டர் திறன், அறிவியல் என பிரித்துள்ளனர். மாணவர்கள் ஆங்கிலம், 2 மாெழிகள் இல்லாமல் 3 குருப்பில் இருந்து 4 பாடங்களை எடுத்து படித்தால் போதுமானது என கூறுகின்றனர். மாணவர்கள் விரும்பும் பாடத்தை எடுத்து படிக்கலாம். பொதுத் தேர்வினை மற்றப் பாடத்திற்கு வைத்துக் கொள்ளலாம்.

ஒவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி ஆகியவற்றிக்கு பள்ளி அளவில் தேர்வு வைத்துக் கொள்வதுடன், அதனை கண்காணிக்க வேறுப் பள்ளியில் இருந்து ஆசிரியர் நியமிக்க வேண்டும் என கூறியுள்ளனர். 12 ஆம் வகுப்பில் ஆங்கிலம், ஏதாவது ஒரு இந்திய மொழி, 4 முக்கியப்பாடங்களை தேர்வு எழுத வேண்டும். குழந்தைகளுக்கான விரும்பம் எந்தப் பாடத்தில் உள்ளதோ அதனை எடுத்துப் படிக்கலாம் என கூறியுள்ளனர். எனவே குலக்கல்வி போன்றவை திணிக்கப்படுவதாக ஒரு காலத்தில் கூறப்பட்டது. தற்பொழுது அதுபோன்று இல்லை. குழந்தைகள் மன அழுத்தம் இல்லாமல் அவர்கள் விரும்பும் பாடத்தை எடுத்து படிப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேசியக்கல்விக் கொள்கையில் அனைத்து மாநிலங்களும் வர வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசு மாநிலக்கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு குழு அமைத்துள்ளனர். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு ஏற்றார் போல் பாடத்திட்டம், தேர்வுமுறைகளை கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேசியக்கல்விக்கொள்கைக்கும் , தமிழ்நாடு அரசு உருவாக்கும் கல்விக் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் வெளியானப்பின்னர் தான் தெரியும். மாநிலங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் படித்தான் சிறந்தக் கல்வியா என்பது தெரியவரும்.

ஆனால், தமிழ்நாட்டை பொறுத்த வரையில் மாநில அரசு தனது மாணவர்களுக்கு எது சிறந்தது என நினைத்துக் கொண்டு செயல்படுத்தினால் மொழிப்பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்ற பிரச்னை வராது. தமிழ்நாடு அரசு இரு மாெழிக்கொள்கை போதும் என நினைத்துக் கொண்டு வந்தால் பிற மொழிகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை என்ற பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இல்லை. தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றினால் பிற மொழிகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய பிரச்னை வராது.

தேசியகல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றாவிட்டால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். சிபிஎஸ்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு 5 ஆம் வகுப்பு வரையில் ஆங்கிலம் மற்றும் ஒரு மாெழி கற்பிக்கப்படுகிறது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ஆங்கிலம், வேறு ஏதாவது 2 மாெழிகள் கற்பிக்கப்படுகிறது. அவர்கள் இந்திப் படி என கூறவில்லை. தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் ஆங்கிலம், வேறு ஒரு மொழி மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினால் பாதிப்பு இருக்கதான் செய்யும். மாணவர்கள் இந்தி கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தி பிரசார சபாவில் (Hindi Prachar Sabha - என்பது ஒரு கல்வி அமைப்பு) சென்று கற்றுக் கொள்ளலாம்.

இந்தி திணிக்கப்படவில்லை. சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை 2 அல்லது 3 ஆவது மாெழியாக 8 ஆம் வகுப்பு வரையில் படித்திருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு முதல் அவசியம் கிடையாது. தமிழ்நாடு அரசு எந்தக் கொள்கை கொண்டு வரப் போகிறது என தெரியவில்லை. அவர்களும் ஆங்கிலம், தமிழ் மாெழியுடன் ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம் என கூறினால் மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது என கருதுகிறேன்.

பாலர் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் எழுதி படிக்கத் தேவையில்லை. அவர்கள் கையால் விளையாடிக் கொண்டே கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு விளையாடிக்கொண்டே, மன அழுத்தம் இல்லாமல் படிக்க வைக்க உள்ளனர். குழந்தைகளுக்கு மன அழுத்தம் இல்லாத கல்வி முறைதான் சிறந்தது. மாணவர்கள் கற்க விரும்புவதை எடுத்துக்கொண்டு மன அழுத்தம் இல்லாமல் படிப்பதற்கு வாய்ப்புள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்குத் தேவைப்படும் செலவையும் செய்து தான் ஆக வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3வது நபர்களை வைத்து ஆய்வு செய்வதா? - ஆசிரியர்கள் கொந்தளிப்பு

ABOUT THE AUTHOR

...view details