தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்க தேர்தல் பற்றியா முருகனும் நளினியும் பேசப் போகிறார்கள்? - நீதிபதி கிருபாகரன்

By

Published : Aug 12, 2020, 2:43 PM IST

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், நளினி ஆகியோர் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Nalini murugan want to interact with abroad relations
High court chennai

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கார்த்திகேயன், "வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும்" எனத் தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், "முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்க தேர்தல் தொடர்பாகவா பேச போகிறார்கள்" என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், 2015ஆம் ஆண்டு வரை மட்டுமே அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details