குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் உத்தரப் பிரதேசத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி நடத்துவதற்கு ஒன்று திரண்டனர்.
சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாகக் கூறி கையில் 500 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை ஏந்தியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் பல்லாவரத்திலிருந்து பேரணியைத் தொடங்கினர்.
சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்ற பேரணியை பல்லாவரம் பழைய சந்தை சாலையில் காவல் துறையினர் நிறுத்தினர். பின்னர் காவல் துறையினர் அனுமதித்த இடத்தில் மேடை அமைத்த இஸ்லாமியர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.