தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முகிலன் குறித்து துப்பு கிடைத்து விட்டது' - சிபிஐ அறிக்கை தாக்கல்! - Mukilan missing case

சென்னை: சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மாயமான வழக்கு விசாரணையில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

முகிலன்

By

Published : Jun 6, 2019, 5:24 PM IST

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் மாயமாகி இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட இரு நாட்களுக்குள் முகிலன் மாயமாகி இருப்பதாகவும், அவரை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை சிபிசிஐடி காவல் துறையின் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "முகிலன் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முகிலன் குறித்து காவல் துறையினருக்கு துப்பு கிடைத்துள்ளது. அதை வெளியில் கூறினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details