சென்னை:பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் திரும்ப பெற எதிர்ப்பு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை எதிர்க்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கறுப்பு கொடியேந்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பாஜக அரசுக்கு எதிராக குரல்
திமுக சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கறுப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டும், ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தியும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ”பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், மக்கள் போராட்டமாக நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றப்பட்டதற்கு பாஜக வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது பாஜக அரசு தினமும் உயர்த்தி வருகிறது.
மக்களை பழிவாங்கும் திட்டம்